search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சலிங்க அருவி"

    • தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    உடுமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது.

    இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 83.25 அடி தண்ணீர் நிறைந்துள்ளது. அணைக்கு 10194 கன அடி நீர்வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

    மடத்துக்குளம்-45, தாராபுரம்-17, மூலனூர்-5, குண்டடம்-10, உப்பாறு அணை-16, நல்லதங்காள் ஓடை அணை-8, உடுமலை-35, அமராவதி அணை-75, திருமூர்த்தி அணை-56, திருமூர்த்தி அணை ஐ.பி.,-55. மாவட்டம் முழுவதும் மொத்தம் 338.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
    • அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு திடீரென காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதும் பின்பு குறைந்து விடுவதுமாக உள்ளது.இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். 

    • கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது.
    • அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த சூழலில் கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியவாறு அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்து திருமூர்த்தி அணையை அடைந்தது. இந்தநிலையில் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.

    ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.இதன் காரணமாக அருவிக்கு நீர் வரத்தை அளிக்கக்கூடிய ஆறுகள் ஓடைகள் வறண்டு விட்டது. இதனால் அருவியும் நீர்வரத்து இல்லாமல் வெறுமனே காட்சி அளித்து வந்தது.சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.இந்த நிலையில் அருவியின் நீராதாரங்களான குழிப்பட்டி, குருமலை பகுதியில் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் உற்சாகத்தோடு அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்தோடு அருவிப்பகுதியில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.அதைத்தொடர்ந்து அடிவார பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

    • அணையின் கரையோரப் பகுதியில் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனர்.
    • பஞ்சலிங்க அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளம் மற்றும் திருமூர்த்தி அணை பூங்கா ஆகிய பகுதிகளில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதே போல அமராவதி அணை பூங்கா மற்றும் அருகில் உள்ள முதலைப் பண்ணைகளுக்கும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட ,மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை காலை முதலில் திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்தன. அணையின் கரைகளில் அமர்ந்து இயற்கையை ரசித்த சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பகுதியில் உள்ள வண்ண மீன் காட்சியகத்தை கண்டுகளித்தனர். குழந்தைகளோடு பூங்காவில் அமர்ந்தும் அணையின் கரையோரப் பகுதியில் அமர்ந்தும் உணவு உண்டு மகிழ்ந்தனர்.

    இதே போல் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அணையின் அருகே அமைந்துள்ள முதலைப்பண்ணைக்கு சென்று முதலைகளை கண்டு மகிழ்ந்ததோடு முதலைப் பண்ணைக்குள் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்கினர்.

    • அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது.
    • அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகள் நீர்வரத்தை பெறுகிறது.

    வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
    • வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மேற்குத்தொடர்ச்சிமலை பகுதியான திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மூலிகைகள் கலந்து குளிர்ந்த நீராக விழும் அருவியில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

    நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கடந்த 3 மாதமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

    இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தோணியாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    உடுமலை:

    உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க சொல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.

    மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்கின்றனர்.

    அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு,செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது. பயண நேரம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இதுபோன்று கட்டுப்பாடுகள் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது. 

    • திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது.
    • மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக அப்பகுதி உள்ளது.

    பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருமூர்த்திமலையில் சீசன் துவங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளிலிருந்து மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.நடப்பு ஆண்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களை கட்டி உள்ளது.

    • பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது
    • இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இம்மலை மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இந்து அறநிலையத் துறையின் கீழ் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.கழிப்பிடம், பெண்க ளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த 2008ல் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.அப்போதைய தி.மு.க., அரசு சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும் 50 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது என்றனர்.தமிழக அரசு வனத்துறை இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 

    • அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
    • நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை,கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு,பாரப்பட்டியாறு,குருமலைஆறு,கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு,பாலாறு,உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்தை பெறுகிறது.

    வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை.ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது.இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.அதைத் தொடர்ந்து கோடை விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து வந்தனர். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வந்தது.இந்த சூழலில் நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    நேற்று பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குறைவான தண்ணீரில் குளித்து ஏமாற்றம் அடைந்த நிலையில் அருவியில் விழுகின்ற ஆக்ரோஷமான தண்ணீரில் குளித்து மகிழலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.எதிர்பார்த்த அளவு தண்ணீர் வராததால் தடை விலக்கி கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×